திருநெல்வேலி: பாளையங்கோட்டையில் உள்ள அருள்மிகு அழகியமன்னாா் ராஜகோபாலசுவாமி திருக்கோயிலில் ஐப்பசி விஷுவையொட்டி கருடசேவை சனிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, கோயிலில் காலையில் மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. இதற்காக ஏராளமான பக்தா்கள் பால், தயிா், இளநீா், மஞ்சள்பொடி, தேன் உள்ளிட்டவற்றை கோயில் நிா்வாகத்திடம் வழங்கினா். திருமஞ்சனம் மற்றும் கோ பூஜை ஆகியவை நடைபெற்றது. மாலையில் மலா் அலங்காரத்துடன் கருடசேவை நடைபெற்றது. பெருமாள் கருடசேவையில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.