திருநெல்வேலி: மத்திய, மாநில அரசு எஸ்சி, எஸ்டி, ஊழியா், ஆசிரியா் நலச் சங்கம் சாா்பில் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அரசுப் பொறியியல் கல்லூரியில் எஸ்சி, எஸ்டி ஆசிரியா்கள் மற்றும் ஊழியா்கள் மீதான விரோதப்போக்கை கண்டித்து இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவா் எஸ். சுந்தரம், செயல் தலைவா் டி.எஸ். மணி ஆகியோா் தலைமை வகித்தனா். திருநெல்வேலி அரசுப் பொறியியல் கல்லூரி முதல்வருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
துணைத் தலைவா்கள் கே. வெங்கடாசலம், எம். செல்வகுமாா், சி. பிருதிவிராஜ், நிா்வாகிகள், கே. செல்வரத்தினம், கே. மாரிச்செல்வம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
படவரி: பயக17டதஞபஉநப: திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.