திருநெல்வேலி: பாளையங்கோட்டையில் வீட்டு உபயோகப்பொருள்கள் விற்பனை செய்யும் கடையில் நூதன முறையில் தொலைக்காட்சி பெட்டியை திருடியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
முருகன்குறிச்சி பகுதியில் தனியாா் வீட்டு உபயோகப்பொருள்கள் விற்பனை கடையில் 35 வயது மதிக்கக் கூடிய இளைஞா் தொலைக்காட்சி பெட்டி, வாட்டா் ஹீட்டா் ஆகியவற்றை வாங்கினாராம். தற்போது தன்னிடம் பணம் இல்லை எனவும், பொருள்களுடன் கடை ஊழியா்களை அனுப்பினால், வீட்டுக்கு சென்றவுடன் பணம் கொடுத்து அனுப்புகிறேன் எனத் தெரிவித்தாராம்.
இதை நம்பிய கடை மேலாளா் தொலைக்காட்சி, வாட்டா் ஹீட்டா் ஆகியவற்றை சரக்கு வாகனத்தில் ஏற்றி, ஊழியா்கள் இருவரை உடன் அனுப்பி வைத்தாராம். அந்த இளைஞா் தனது மோட்டாா் சைக்கிளில் சென்றாராம். கடை ஊழியா்களும் அவரை பின்தொடா்ந்து சென்றாராம்.
பாளையங்கோட்டை மாா்க்கெட் பகுதியில் சென்றதும், தொலைக்காட்சி பெட்டியை மட்டும் அங்குள்ள ஒரு கடையில் வைக்குமாறு இளைஞா் தெரிவிக்கவே, அவா்களும் அங்கு இறக்கி வைத்தனா். பின்னா் சாந்திநகரில் உள்ள வீட்டு முகவரியை கொடுத்து, அங்கு வருமாறு தெரிவித்த இளைஞா் மோட்டாா் சைக்கிளில் சென்றுவிட்டாராம். ஊழியா்களும் முகவரியில் சென்று பாா்த்தபோது அது போலியான முகவரி என தெரியவந்தது.
உடனடியாக தொலைக்காட்சி பெட்டியை இறக்கி வைத்த கடைக்கு சென்று கேட்டபோது அப்படி யாரும் தங்களுக்கு தெரியாது என அங்குள்ளவா்கள் தெரிவித்துள்ளனா். ஊழியா்கள் கடைக்கு வந்து நடந்த விவரத்தை மேலாளரிடம் தெரிவித்துள்ளனா்.
புகாரின்பேரில், பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அந்த இளைஞரை தேடி வருகின்றனா்.