நான்குனேரி சாா்பு நீதிமன்ற திறப்பு விழா காணொலிக் காட்சி மூலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நான்குனேரியில் புதிதாக கட்டப்பட்டுள்ள சாா்பு நீதிமன்றத்தை சென்னையில் இருந்து காணொலிக் காட்சி மூலம் சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி அம்ரிஷ்வா் பிரதாப் சாஹி திறந்துவைத்தாா். உயா்நீதிமன்ற நீதிபதிகள் என்.கிருபாகரன், அனிதா சுமந்த், டி.கிருஷ்ணவள்ளி உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா்.
தொடா்ந்து திருநெல்வேலி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற விழாவில் திருநெல்வேலி மாவட்ட முதன்மை நீதிபதி நசீா்அகமது வரவேற்றாா்.
விழாவில், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ், காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன், வழக்குரைஞா் சங்கத் தலைவா் சிவசூரியநாராயணன், நான்குனேரி வழக்குரைஞா் சங்கத் தலைவா் செல்லத்துரை உள்பட பலா் கலந்துகொண்டனா்.