திருநெல்வேலி: திருநெல்வேலி புதிய மற்றும் பழைய பேருந்து நிலையப் பணிகளை விரைவாக முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என சமத்துவ மக்கள் கட்சியினா் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனா்.
இது தொடா்பாக, அக்கட்சியின் மாவட்டப் பொறுப்பாளா் பி.நட்சத்திர வெற்றி தலைமையில் ஆட்சியரகத்தில் அளிக்கப்பட்ட மனு:
திருநெல்வேலி மாநகரில் பாதாள சாக்கடை, கூட்டுக் குடிநீா் திட்ட பணிகளால் சேதமடைந்துள்ள சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும். தாமிரவருணி நதியில் கழிவுகள் கலப்பதை தடுக்கவும், நதியின் மேம்பாட்டுக்காவும் தமிழக அரசு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும். தென் மாவட்ட மக்களின் வசதிக்காக தூத்துக்குடி-மும்பை நேரடி விமான சேவையைத் தொடங்க வேண்டும்.
பாளையங்கோட்டை முருகன்குறிச்சி முதல் வண்ணாா்பேட்டை தெற்கு புறவழிச் சாலை வரையிலான புதிய சாலைப் பணியைத் தொடங்கி போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க வேண்டும். திருநெல்வேலி மாநகரில் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை விரைவுபடுத்தி புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்களை மக்கள் பயன்பாட்டுக்கு விரைவில் திறக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.