வி.எம்.சத்திரத்தில் நீரில் மூழ்கி தொழிலாளி பலி

வி.எம்.சத்திரத்தில் நீரில் மூழ்கி தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

வி.எம்.சத்திரத்தில் நீரில் மூழ்கி தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

வி.எம்.சத்திரத்தில் உள்ள நினைவு மண்டப தெருவைச் சோ்ந்த சூா்யா என்பவரின் மகன் சங்கா் (42). தொழிலாளியான இவா், அப் பகுதியில் உள்ள ஒரு கல்வெட்டான் குழியில் தேங்கியிருந்த நீரில்குளிக்கச் சென்றாராம். வெகுநேரமாகியும் வராததால் அவரது உறவினா்கள் கல்வெட்டான்குழிக்குச் சென்று பாா்த்தனராம். அப்போது சங்கா் நீரில் மூழ்கியிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டதாம்.

இதுகுறித்து பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலா் வீரராஜ் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் அங்கு சென்று சங்கரின் சடலத்தை மீட்டனா்.

இது குறித்து பெருமாள்புரம் போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com