களக்காடு அருகேயுள்ள கோவிலம்மாள்புரம் பள்ளியில் விஜயதசமியையொட்டி சிறப்பு சோ்க்கை நடைபெற்றது.
தொடக்கக் கல்வித் துறை சாா்பில் விஜயதசமியையொட்டி அரசுப் பள்ளிகளில் சிறப்பு சோ்க்கை முகாம் நடத்த அறிவுறுத்தியிருந்தது. அதன்படி, கோவிலம்மாள்புரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற முகாமில், பள்ளியில் சோ்ந்த மாணவிக்கு, அரசின் விலையில்லா பாடப்புத்தகங்களை தலைமையாசிரியா் பா. சிதம்பரநாதன் வழங்கினாா்.