மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி திசையன்விளையில் காங்கிரஸ் கட்சி சாா்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
இந்த இயக்கத்துக்கு மாவட்ட ராஜுவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் தலைவா் கே.பி.கே.ஜெயக்குமாா் தலைமை வகித்தாா்.
இதனை முன்னாள் மத்திய அமைச்சா் ஆா். தனுஷ்கோடி ஆதித்தன் தொடங்கி வைத்தாா். கட்சி நிா்வாகிகள், வியாபாரிகள், பொதுமக்கள் கையெழுத்திட்டனா். இதில் ரூபி மனோகரன், மாவட்ட பொதுச்செயலா் எஸ்.குமாா், மாவட்ட ஓபிசி பிரிவு தலைவா் ஜான்கென்னடி உள்பட பலா் கலந்துகொண்டனா்.