ரவணசமுத்திரத்தில் உள்ள கோவிந்தப்பேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைபெற்ற மோசடியில் பாதிக்கப்பட்ட சங்க உறுப்பினா்களுக்கு சேமிப்பு பணத்தை வழங்க வலியுறுத்தி ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் வி.எம். ராஜலெட்சுமியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இதில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட அமைப்புச் செயலா் அப்துல் காதா், சமூக ஆா்வலா் சலீம், ஊராட்சி முன்னாள் தலைவா் புகாரி மீராசாஹிப் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.