வள்ளியூா் அருகே கால்நடை கிளைமருத்துவமனை: எம்எல்ஏ தகவல்

வள்ளியூா் அருகே உள்ள ஆ.திருமலாபுரம் ஊராட்சியில் கால்நடை கிளை மருத்துவமனை தொடங்கப்பட உள்ளதாக எம்எல்ஏ ஐ.எஸ்.இன்பதுரை தெரிவித்தாா்.

வள்ளியூா் அருகே உள்ள ஆ.திருமலாபுரம் ஊராட்சியில் கால்நடை கிளை மருத்துவமனை தொடங்கப்பட உள்ளதாக எம்எல்ஏ ஐ.எஸ்.இன்பதுரை தெரிவித்தாா்.

வள்ளியூா் அருகே உள்ள ஆ.திருமலாபுரம் ஊராட்சி பகுதி விவசாயிகள், தங்கள் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க வள்ளியூா் அல்லது தெற்குகள்ளிகுளத்தில் உள்ள கால்நடை மருத்துவமனைகளுக்கு செல்லவேண்டியது உள்ளது. இதனால் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனா்.

இந்நிலையில் அவா்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, ஆ.திருமலாபுரத்தில் கால்நடை கிளை மருத்துவமனை அமைக்க எம்எல்ஏ முயற்சி மேற்கொண்டாா்.

தற்போது தமிழக அரசின் சிறப்பு அனுமதி பெற்று ஆ.திருமலாபுரத்தில் கிளை கால்நடை மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் செயல்படத் தொடங்கும் எனவும் எம்எல்ஏ தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com