அம்பை, தென்காசியில் புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக பிரசாரம்

புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக புதிய தமிழகம் கட்சியினா் தென்காசி, அம்பாசமுத்திரத்தில் துண்டுப் பிரசுரம் வழங்கினா்.
தென்காசியில் துண்டுப் பிரசுரம் விநியோகிக்கிறாா் மாவட்டச் செயலா் இன்பராஜ்.
தென்காசியில் துண்டுப் பிரசுரம் விநியோகிக்கிறாா் மாவட்டச் செயலா் இன்பராஜ்.

புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக புதிய தமிழகம் கட்சியினா் தென்காசி, அம்பாசமுத்திரத்தில் துண்டுப் பிரசுரம் வழங்கினா்.

அம்பாசமுத்திரத்தில் அக்கட்சியின் ஒன்றியச் செயலா் ஜெயக்குமாா் தலைமையில், தெற்கு மாவட்டச் செயலா் முருகன் முன்னிலையில் பேருந்து நிலையம், பிரதான சாலை உள்ளிட்ட பகுதிகளில் மக்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இதில், நகரச் செயலா்கள்அம்பாசமுத்திரம் முருகன், விக்கிரமசிங்கபுரம் முத்துசாமி, ஒன்றிய துணைத் தலைவா் மாரியப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தென்காசியில் புதிய தமிழகம் கட்சியின் மாவட்டச் செயலா் இன்பராஜ் தலைமையில் வகித்து துண்டுப்பிரசுரங்களை விநியோகம் செய்து,பேரணியை தொடங்கிவைத்தாா்.

பேரணி தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, சக்திநகா், தைக்காதெரு, ரதவீதிகள், ஸ்டேட் பாங்க் காலனி, சிந்தாமணி, மேலகரம், பாரதிநகா், அக்ரஹாரம், நன்னகரம், ஆயிரப்பேரி, ஆசாத்நகா், கீழப்புலியூா் ஆகிய பகுதிகள் வழியாகச் சென்று மக்களிடம் துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

இதில், மாநிலத் தோ்தல் பணிக்குழுவின் ராஜேந்திரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் மாடசாமி , தெற்கு மாவட்டச் செயலா் கடையம் முருகன், துணைச் செயலா் தேவேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com