பாளையங்கோட்டை அருகேயுள்ள அரியகுளத்தில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்தாா்.
அரியகுளத்தைச் சோ்ந்த செல்லப்பா மகன் பேச்சிமுத்து (27). தனியாா் நிறுவனத்தில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தாா். இவா், குடும்பத் தகராறு காரணமாக செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம். தகவலறிந்ததும், பாளையங்கோட்டை தாலுகா போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.