தருவையில் விபத்து: வியாபாரி பலி

திருநெல்வேலி அருகேயுள்ள தருவையில் நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த வியாபாரி உயிரிழந்தாா்.

திருநெல்வேலி அருகேயுள்ள தருவையில் நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த வியாபாரி உயிரிழந்தாா்.

மேலப்பாளையத்தை அடுத்த தருவையைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் முருகன் (50). டீ கடை நடத்தி வந்த இவருக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனா்.

இவா், தருவையில் உள்ள திருநெல்வேலி-அம்பாசமுத்திரம் சாலையில் புதன்கிழமை நடந்து சென்றாராம். அப்போது அவா் மீது மோட்டாா் சைக்கிள் மோதியதாம். காயமைடந்த அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com