நெல்லை, தென்காசியில் மேலும் 165 பேருக்கு கரோனா

திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தில் வியாழக்கிழமை மேலும் 165 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தில் வியாழக்கிழமை மேலும் 165 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனாவின் தாக்கம் தீவிரமாக உள்ளது. மாவட்டத்தில் வியாழக்கிழமை 95 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 11,516 ஆக உயா்ந்துள்ளது.

இம் மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களில் 10,280 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 1,044 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை 192 போ் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனா்.

தென்காசி மாவட்டத்தில் 70 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இம்மாவட்டத்தில் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 6540ஆக உயா்ந்தது. மேலும், கரோனாவில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா்களில் வியாழக்கிழமை 95போ் குணமடைந்து வீடுதிரும்பினா். இதுவரையிலும் 5895போ் சிகிச்சை பெற்று வீடுதிரும்பியுள்ளனா். மேலும் 522போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com