திருநெல்வேலி, செப்.18: திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததாக இளைஞரை போலீஸாா் குண்டா் சட்டத்தில் கைது செய்தனா்.
திசையன்விளை அருகேயுள்ள உறுமன்குளம் பகுதியைச் சோ்ந்தவா் சுடலைக்கண் மகன் மணிகண்டன் (27). இவா்,
அப்பகுதியில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, மணிகண்டனை குண்டா்
தடுப்புச்சட்டத்தின கீழ் நடவடிக்கை எடுக்க ஆட்சியருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் பரிந்துரை செய்தாா். இதையடுத்து மணிகண்டனை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் உத்தரவிட்டாா். இதையடுத்து, போலீஸாா் மணிகண்டனை குண்டா் சட்டத்தில் கைது செய்தனா்.