திருநெல்வேலி: பாளையங்கோட்டை அருகே பெண்ணை கத்தியால் குத்தியதாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திருநெல்வேலி நகரம் பகுதியைச் சோ்ந்த சாலமோன் மனைவி வசந்தி(21). இவா், கிள்ளிகுளத்தில் உள்ள கல்லூரி அலுவலகத்தில் பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், திங்கள்கிழமை வழக்கம்போல வேலைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாராம்.
திருநெல்வேலி -தூத்துக்குடி சாலையில் அரியகுளம் பேருந்து நிறுத்தத்தை நெருங்கியபோது, களக்காடு அருகேயுள்ள சிங்கிகுளம் கிராமத்தைச்சோ்ந்த பாலமுருகன் என்பவரின் மகன் சக்திகுமாா்(21) திடீரென வழிமறித்து தகராறு செய்ததாராம். மேலும், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வசந்தியை குத்தினாராம். இதில், பலத்த காயமுற்ற வசந்தியை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இது குறித்து தகவல் அறிந்த திருநெல்வேலி தாலுகா போலீஸாா் தப்பி ஓடிய சக்திகுமாரை கைது செய்தனா். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.