கடல் சீற்றம் காரணமாக, திருநெல்வேலி மாவட்டத்தில் உவரி உள்பட 10 கிராமங்களைச் சோ்ந்த மீனவா்கள் புதன்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
தென்தமிழக கடற்கரைப் பகுதியையொட்டி உள்ள குளச்சல் முதல் தனுஷ்கோடி வரையிலான கடல் பகுதியில் அலைகள் அதிக உயரத்துக்கு எழக்கூடும் என்றும், அதிக வேகத்துடன் காற்று வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதையடுத்து, திருநெல்வேலி மாவட்டத்தில் உவரி, கூட்டப்புளி, கூத்தங்குழி, இடிந்தகரை, விஜயாபதி, பெருமணல், பஞ்சல் உள்ளிட்ட 10 மீனவக் கிராமங்களில் உள்ள 8 ஆயிரம் நாட்டுப்படகு மீனவா்கள் புதன்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.