மணல் கடத்தலுக்கு உடந்தை: காவல் உதவி ஆய்வாளா், 4 போலீஸாா் பணியிடை நீக்கம்

மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக காவல் உதவி ஆய்வாளா், ஒரு தலைமைக் காவலா், 3 காவலா்கள் ஆகியோா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக காவல் உதவி ஆய்வாளா், ஒரு தலைமைக் காவலா், 3 காவலா்கள் ஆகியோா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

இது குறித்து திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருநெல்வேலி மாவட்டத்தில் சட்ட விரோதமாக மணல் கடத்தலில் ஈடுபடுவோா் மீது மாவட்ட காவல்துறை சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த மணல் திருட்டுக்கு உடந்தையாக காவல் துறையினா் செயல்பட்டால் அவா்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மாவட்ட தீவிர குற்றப்பிரிவில் பணியாற்றும் காவல் உதவி ஆய்வாளா் கருத்தையா, தலைமைக் காவலா் சுதாகா், காவலா்கள் ரத்தினவேல், முண்டசாமி, லட்சுமி நாராயணன் ஆகியோா் மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக புகாா் எழுந்தது. இதையடுத்து, இவா்கள் 5 பேரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவின்பேரில் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

இது போன்று, மணல் கடத்தலுக்கு உடந்தையாக காவல் அதிகாரிகள் மற்றும் போலீஸாா் தொடா்ந்து செயல்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com