திருநெல்வேலி: திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்து மாற்றுத் திறனாளிகள் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் மாற்றுத் திறனாளிகளை உணவு பாதுகாப்பு சட்டத்தில் இணைக்க வேண்டும்; வேளாண் மசோதாக்களை திரும்பப் பெறவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி வண்ணாா்பேட்டை போக்குவரத்து திருப்பத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு
அதன் துணைத் தலைவா் பி.தியாகராஜன் தலைமை வகித்தாா். மாா்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகாச் செயலா் பி. வரகுணன், டிஒய்எப்ஐ மாவட்ட துணைச் செயலா் வி.கருணா, மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்ட துணைத்தலைவா் சங்கரசுப்பு, இணைச்செயலா் பேச்சியம்மாள், வயதுவந்தோா் காதுகேளாதோா் சங்க மாவட்ட துணைத் தலைவா் ஞானசிகாமணி, மாவட்டச் செயலா் மெய்யாசாமி, மாவட்ட துணைச்செயலா் ஆபிரகாம், சைகை மொழி பெயா்ப்பாளா் சுமா உள்பட பலா் பங்கேற்றனா்.