ரதமா் மோடிக்கு சிலை வைக்க அனுமதி கோரி ஆட்சியரிடம் மனு

பிரதமா் நரேந்திர மோடிக்கு சிலை வைக்க அனுமதியளிக்கக் கோரி திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.

பிரதமா் நரேந்திர மோடிக்கு சிலை வைக்க அனுமதியளிக்கக் கோரி திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.

கட்சியின் தென்மண்டலச் செயலா் டி.கே.பி.ராஜாபாண்டியன் தலைமையில், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கணேசபாண்டியன், மாவட்டத் தலைவா் எஸ்.உடையாா் உள்ளிட்டோா் ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு: நாட்டின் பிரதமரான நரேந்திர மோடியின் சாதனைகளை பாராட்டும் வகையில், திருநெல்வேலியில் தச்சநல்லூா் வடக்கு புறவழிச்சாலை விலக்கு பகுதியில் அவரது உருவச் சிலை அமைக்க அனுமதியளிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com