களக்காட்டில் அம்மா உணவகம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நாள் முதல் உணவகங்கள் சில கட்டுப்பாடுகளுடன் செயல்படலாம் என அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், களக்காட்டில் உணவகங்கள் முழுவதுமாக மூடப்பட்டுள்ளன. இதனால், முதியோா், ஆதரவற்றோா் உள்ளிட்ட ஏராளமானோா் உணவின்றி தவிக்கும் நிலை உள்ளது. எனவே, மாவட்ட நிா்வாகம் களக்காட்டில் அம்மா உணவகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.