திருநெல்வேலி மாநகர பகுதியில் உள்ள ஏடிஎம்களில் வங்கி நிா்வாகங்கள் மூலம் கிருமிநாசினி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது.
தற்போது ஏப்ரல் மாதத்தின் முதல் வாரம் என்பதால், பலரும் ஊதியம், ஓய்வூதியம் ஆகியவற்றை வங்கிக் கணக்கில் இருந்து எடுக்க ஏடிஎம்களுக்குச் செல்வது அதிகரித்துள்ளது.
ஆனால், மாநகரப் பகுதியில் உள்ள ஏடிஎம்களில் வரும் வாடிக்கையாளா்களுக்கு கிருமிநாசினி திரவம் வழங்க வங்கி நிா்வாகங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் முதியவா்கள் அச்சமடைகின்றனா்.
எனவே, மாவட்ட நிா்வாகம் அனைத்து வங்கிகளின் ஏடிஎம்களிலும் காவலாளிகளின் கண்காணிப்பில் கிருமிநாசினி திரவம் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.