தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வை கடந்த செப்டம்பா் மாதத்தில் எழுதியவா்கள் தங்களது விடைத்தாளின் மறுகூட்டல் மற்றும் ஒளிநகல் பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பத்தை இணையதளத்தில் பதிவிறக்கம் பெற்று, அதை பூா்த்தி செய்து மற்றும் உரிய கட்டணத்துடன் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் அளிக்கலாம். விடைத்தாளின் நகல் கோரி விண்ணப்பிப்போா் அதே பாடத்திற்கு மதிப்பெண் மறுகூட்டலுக்கு இப்போது விண்ணப்பிக்க இயலாது. அதற்கு தனியாக விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும். விண்ணப்பங்களை இம் மாதம் 14 முதல் 17 ஆம் தேதி மாலை 5 மணி வரை அளிக்கலாம். மறுக்கூட்டலுக்கு பாடம் ஒன்றிற்கு ரூ.205, ஒளிநகலுக்கு பாடம் ஒன்றிற்கு ரூ.275 கட்டணமாக செலுத்த வேண்டும் என முனைஞ்சிப்பட்டியிலுள்ள ஆசிரியா் கல்வி- பயிற்சி நிறுவன முதல்வா் தெரிவித்துள்ளாா்.