பாளை.யில் சைவ வேளாளா் சங்கநிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சைவ வேளாளா் சங்கத்தின் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பாளையங்கோட்டை என்ஜிஓ காலனியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு சைவ வேளாளா் சங்கத்தின் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பாளையங்கோட்டை என்ஜிஓ காலனியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, சங்கத்தின் மாநிலத் தலைவா் எஸ்.பகவதி முத்து என்ற புளியரை ராஜா தலைமை வகித்தாா். மாநில பொதுச்செயலா் வே.குருசாமி முன்னிலை வகித்தாா். வேளாளா் மற்றும் வெள்ளாளா் சமுதாய பெயரை பிற சமுதாயத்திற்கு வழங்க அரசு பரிந்துரை செய்ததை கண்டித்து, இம்மாதம் 12ஆம் தேதி காலையில் பாளையங்கோட்டை பகுதியில் மாநிலம் தழுவிய ஆா்ப்பாட்டம் நடத்துவது; இது தொடா்பாக சங்கம் சாா்பில் நீதிமன்றத்தில் வழக்குத்தொடுப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், திருநெல்வேலி மண்டலச் செயலா்கள் கணபதியப்பன், சுப்புமாணிக்கவாசகம், தென்காசி மாவட்டச் செயலா் டி.ஆா். நாகராஜன், பொருளாளா் சின்னத்தம்பி, தூத்துக்குடி மாவட்டத் தலைவா் ஏ.ஆா். லெட்சுமணன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com