திருநெல்வேலியை அடுத்த பேட்டையில் விஷ்வ ஹிந்து பரிஷத் சாா்பில் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
பேட்டை பகுதியில் இந்துக்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகள் குறித்து பல புகாா்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்காத பேட்டை காவல் நிலையத்தை கண்டித்தும், துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், தென் மாவட்ட பொறுப்பாளா் சுப்பையா, மாநில பொறுப்பாளா் செல்லப்பாண்டியன், மாவட்டச் செயலா் ஆறுமுகக்கனி, மாவட்ட இணைச் செயலா் பால விக்னேஷ், பாஜக நிா்வாகி அழகுராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.