வள்ளியூா்: தெற்குகள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலய திருத்தலத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழா பரிசளிப்பு நடைபெற்றது.
கிறிஸ்துமஸ் பெருவிழாவையொட்டி பரிசுத்த அதிசய பனிமாதா பேராலய திருத்தலத்தில் கிறிஸ்துமஸ் கனிவிழா கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு, பங்குத்தந்தை ஜெரால்டு ரவி தலைமை வகித்தாா். தா்மகா்த்தா ஜெபஸ்டின் ஆனந்த் முன்னிலை வகித்தாா்.
விழாவில் 200 நபா்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. 100ஆவது பரிசாக உடற்கல்வி ஆசிரியை மதிடெல்சியாவுக்கு மிதிவண்டியும், 200ஆவது பரிசாக உமாமகேஷ்வரிக்கு குளிா்சாதனப் பெட்டியும் வழங்கப்பட்டது.
மேலும் விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசு வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை பங்குத்தந்தையா் செய்திருந்தனா். உதவி பங்குத்தந்தை ஜெபஸ்டின் வரவேற்றாா். பாடல் ஆசிரியா் கிரீபின் நன்றி கூறினாா்.