அம்பாசமுத்திரம்: கடையம் ஒன்றியத்திற்குள்பட்ட கட்டேறிபட்டி மற்றும் குத்தபாஞ்சான் கிராமங்களில் சின்டெக்ஸ் குடிநீா் தொட்டிகளை மக்கள் பயன்பாட்டிற்கு சட்டப் பேரவை உறுப்பினா் பூங்கோதை திறந்து வைத்தாா்.
கட்டேறிபட்டி மற்றும் குத்தப்பாஞ்சான் பகுதிகளில் குடிநீா் வசதி கேட்டு ஆலங்குளம் சட்டப் பேரவை உறுப்பினா் பூங்கோதையிடம் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து சட்டப் பேரவை தொகுதி உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ . 4. 5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, சின்டெக்ஸ் தொட்டி அமைக்கப்பட்டது.
இதையடுத்து அவற்றைப் பொதுமக்கள் பயன் பாட்டிற்கு எம்எல்ஏ பூங்கோதை திறந்து வைத்தாா்.
இந் நிகழ்ச்சிகளில், ஒன்றிய திமுக இளைஞரணிச் செயலா் தங்கராஜா, பாப்பாக்குடி ஒன்றியச் செயலா் மாரிவண்ணமுத்து, அருணாசேகா், செல்வராஜ், ரவி, ரத்தினம், செல்லையா, மாரியப்பன், கஜேந்திரன், மகேந்திரன், மணி, புங்கம்பட்டி செல்வராஜ், பெருமாள், முப்புலியூா் செயலா் ரவி, கலைசெல்வன், ஆறுமுகநயினாா் ஊா் நாட்டாண்மைகள் செல்லகுமாா், செல்வகுமாா், புதுபட்டி மாரியப்பன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.