திருநெல்வேலி மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு காவல்துறை தடை விதித்துள்ளது.
இது தொடா்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரோனா தடுப்பு விதிமுறைகள் அமலில் உள்ளதால் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. மேலும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி அளித்தால் அதன் மூலம் கரோனா வைரஸ் பரவ வாய்ப்பு இருப்பதால் மாவட்டத்திலுள்ள நட்சத்திர விடுதிகள், கேளிக்கை மன்றங்கள், கடற்கரை பகுதிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் வாகனங்களில் இரவு நேரங்களில் அதி வேகமாக சென்று புத்தாண்டு கொண்டாடுதல் ஆகியவற்றிற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. மீறினால் காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.