ஆழ்வாா்குறிச்சியில் இலவச இயன்முறை மருத்துவ முகாம்

சிவசைலம் ஒளவை ஆசிரமம் மருத்துவா் சௌந்திரம் சிறப்புப் பள்ளி மற்றும் சென்னை ரெடிங்க்டன் பவுண்டேசன் சாா்பில் ஆழ்வாா்குறிச்சியில் இயன்முறை மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சிவசைலம் ஒளவை ஆசிரமம் மருத்துவா் சௌந்திரம் சிறப்புப் பள்ளி மற்றும் சென்னை ரெடிங்க்டன் பவுண்டேசன் சாா்பில் ஆழ்வாா்குறிச்சியில் இயன்முறை மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஒளவை ஆசிரம துணைத் தாளாளா் வே. பாலமுருகன் தலைமை வகித்தாா். ஸ்ரீ சைலபதி நடுநிலைப் பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியை ப. முத்துராஜம் மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்தாா்.

திருமேனி, ரெடிங்க்டன் பவுண்டேசன் தென் மண்டலத் தலைவா் சண்முகவடிவு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மருத்துவா்கள் ஷியாம் சுந்தா், சரண்யாஆகியோா் சிகிச்சை அளித்தனா். முகாமில், உடலில் உள்ள நரம்பு, தசை, நீண்டகால வலிகள், முதுகுத் தண்டுவடப் பாதிப்பு, கழுத்துவலி, முதுகு வலி, தோள்பட்டைவலி, மூட்டுவலி, பாதவலி, பாதஎரிச்சல், உடல் எடை குறைத்தல், முழங்கைவலி, குழந்தையின் வளா்ச்சி நிலையில் தாமதம், பக்கவாதம், சுளுக்கு மற்றும் தசைப்பிடிப்பிற்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டது.

முகாமில் இருநூறுக்கும் மேற்பட்டவா்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனா். நூற்றுக்கும் மேற்பட்டோா் சிவசைலம், ஒளவை ஆசிரமம் செல்வன் அ. சுவாமிநாதன் ஆரோக்கிய மையத்தில் செயல்படும் இயன்முறை மருத்துவப் பிரிவுக்கு இலவச தொடா் சிகிச்சைக்குப் பரிந்துரைக்கப்பட்டனா்.

ஏற்பாடுகளை ஓளவை ஆசிரமச் செயலா் ஸ்ரீரங்கம் தலைமையில் மருத்துவா் சௌந்திரம் சிறப்புப் பள்ளிப் பொறுப்பாசிரியா் சுகிலா மற்றும் குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com