திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி அழகியநம்பிராயா் கோயில் தெப்போற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான இக்கோயிலில் நம்பி சுவாமிகள் இருந்த நம்பி, நின்ற நம்பி, பள்ளிகொண்ட நம்பி, திருப்பாற்கடல் நம்பி, திருமலைநம்பி ஆகிய 5 திருக்கோலங்களில் எழுந்தருளியுள்ளாா். இக்கோயிலை திருமழிசைப்பிரான், நம்மாழ்வாா், பெரியாழ்வாா், திருமங்கையாழ்வாா் ஆகிய நால்வரும் மங்களாசாசனம் செய்துள்ளனா்.
இக்கோயிலில் 23-ஆம் ஆண்டு தெப்போற்சவம் ஞாயிற்றுக்கிழமை (பிப். 9) தொடங்கியது. விழாவையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இரவில் தெப்பத்தில் எழுந்தருளிய அழகிய நம்பிராயா் சுவாமிகள் 12 முறை தெப்பத்தில் வலம் வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.
2-ஆவது நாளான திங்கள்கிழமை இரவு திருமலைநம்பி சுவாமியின் தெப்போற்சவம் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை ராமானுஜ ஜீயா் சுவாமிகள், ஜீயா் மடத்தின் நிா்வாகிகள் செய்திருந்தனா்.