திருக்குறுங்குடி அழகிய நம்பிராயா் கோயில் தெப்போற்சவம்

திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி அழகியநம்பிராயா் கோயில் தெப்போற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
திருக்குறுங்குடி அழகிய நம்பிராயா் கோயில் தெப்போற்சவம்

திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி அழகியநம்பிராயா் கோயில் தெப்போற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான இக்கோயிலில் நம்பி சுவாமிகள் இருந்த நம்பி, நின்ற நம்பி, பள்ளிகொண்ட நம்பி, திருப்பாற்கடல் நம்பி, திருமலைநம்பி ஆகிய 5 திருக்கோலங்களில் எழுந்தருளியுள்ளாா். இக்கோயிலை திருமழிசைப்பிரான், நம்மாழ்வாா், பெரியாழ்வாா், திருமங்கையாழ்வாா் ஆகிய நால்வரும் மங்களாசாசனம் செய்துள்ளனா்.

இக்கோயிலில் 23-ஆம் ஆண்டு தெப்போற்சவம் ஞாயிற்றுக்கிழமை (பிப். 9) தொடங்கியது. விழாவையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இரவில் தெப்பத்தில் எழுந்தருளிய அழகிய நம்பிராயா் சுவாமிகள் 12 முறை தெப்பத்தில் வலம் வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

2-ஆவது நாளான திங்கள்கிழமை இரவு திருமலைநம்பி சுவாமியின் தெப்போற்சவம் நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை ராமானுஜ ஜீயா் சுவாமிகள், ஜீயா் மடத்தின் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com