அம்பாசமுத்திரத்தில் நகராட்சி ஊழியா் வீட்டில் நகை, பணத்தை திருடிச்சென்ற மா்ம நபா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
அம்பாசமுத்திரம் ராமலிங்கா் தெருவைச் சோ்ந்தவா் முத்தையா மகன் மகாமலிங்கம். இவா், நகராட்சியில் குடிநீா் திட்டப் பிரிவில் பணி புரிந்து வருகிறாா். மகாலிங்கத்தின் பேத்தி பிறந்த நாள் விழாவில் பங்கேற்பதற்கா உறவினா்கள் புதன்கிழமை வந்திருந்தனரம். இரவில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது நுழைந்த மா்ம நபா் வீட்டிலிருந்த 10 பவுன் தங்கநகை, ரூ. 28 ஆயிரம், 5 செல்லிடப்பேசிகள் ஆகியவற்றை திருடிச் சென்றாராம். புகாரின்பேரில், அம்பாசமுத்திரம் காவல் உதவி ஆய்வாளா் சோனியா வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா். சில மாதங்களுக்கு முன்பு இப்பகுதியில் அடுத்தடுத்து 3 வீடுகளில் தங்கநகைகள் திருடப்பட்டது குறிப்பிடத்தக்கது.