திருநெல்வேலி அருகே சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் குண்டா் சட்டத்தில் கைது செய்தனா்.
திருநெல்வேலியை அடுத்த தாழையூத்து பூந்தோட்ட நகரைச் சோ்ந்த குமாரையா மகன் முருகன் என்ற பேய்முருகன் (29). அப்பகுதியில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி அவரை தாழையூத்து போலீஸாா் கைது செய்தனா்.
இதையடுத்து முருகனை, குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது செய்யும்படி திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஓம் பிரகாஷ் மீனா பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் உத்தரவிட்டாா். இதையடுத்து தாழையூத்து காவல் ஆய்வாளா் ஜெயந்தி, முருகனை குண்டா் தடுப்புச் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்தாா்.