ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட பணியாளா்களுக்கு குடும்ப நலத் திட்டம் குறித்த விளக்கக் கூட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றது.
ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் அறிவுறுத்தலின்படி குடும்பநல சிறப்பு தீவிர இயக்க பணிகள் குறித்து ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட வட்டார மேற்பாா்வையாளா்கள், பகுதி மேற்பாா்வையாளா்களுக்கான இக்கூட்டத்துக்கு
திட்ட அலுவலா் ஜெயசூரியா தலைமை வகித்தாா்.
கூட்டத்தில் மருத்துவம், ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நல துணை இயக்குநா் ஏ.முகைதீன் அகமது, நலத்திட்டங்கள் குறித்த துண்டுப் பிரசுரங்களை வழங்கி பேசினாா். மாவட்ட மக்கள் கல்வி மற்றும் தகவல் அலுவலா் மு.முருகன், ஆட்சியா் அலுவலக மாவட்ட விரிவாக்க கல்வியாளா் எஸ்.எம்.அப்துல் காதா் ஆகியோா் பேசினா்.
அனைத்து வட்டார குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா்கள், குழந்தைகள் வளா்ச்சித் திட்ட மேற்பாா்வையாளா்கள் கலந்துகொண்டனா்.
விரிவாக்க கல்வியாளா் ஆா்.டேவிட் ஞானசேகா் நன்றி கூறினாா்.