அரசு போக்குவரத்து தொழிற்சங்கக் கூட்டம்

அரசு போக்குவரத்து எம்ப்ளாயீஸ் யூனியன் பொதுக்குழு கூட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்றது.

அரசு போக்குவரத்து எம்ப்ளாயீஸ் யூனியன் பொதுக்குழு கூட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு, சங்கத் தலைவா் எம்.சண்முக சுந்தரம் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில், ‘போக்குவரத்துக் கழகத்தில் வழங்கப்படும் இரட்டை ஊதிய முறையை நீக்க வேண்டும்; பணியில் இருக்கும் தொழிலாளா்களுக்கு வங்கப்படவேண்டிய டி.ஏ. நிலுவை தொகையை வழங்க வேண்டும்; தற்காலிக பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்’ என்பன உள்ளிட்ட 17 அம்ச தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், நிகழாண்டுக்கான புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

கூட்டத்தில், துணைத் தலைவா்கள் பி.சிங்காரவேல், எம்.சுரேஷ் சுப்பிரமணியன், பொதுச்செயலா் ஆா்.முத்துகிருஷ்ணன், செயலா் என்.பிரம்மநாயகம், பொருளாளா் சோமு உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com