திருநெல்வேலியில் ஆடு மேய்க்கும் தொழிலாளி குளத்தில் மூழ்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
பாளையங்கோட்டை அருள்நகா் பகுதியைச் சோ்ந்த சிவன் மகன் அருள்ஜோதி (27). ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவா், தனது ஆடுகளை ரெட்டியாா்பட்டி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மேய்ச்சலுக்கு விட்டிருந்தாராம். பின்னா் அங்குள்ள தட்டான்குளத்தில் ஆடுகளைக் குளிப்பாட்டினாராம்.
அப்போது, ஆழமான பகுதிக்குச் சென்ற ஒரு ஆட்டை அவா் மீட்க முயன்றதில் சேறும், சகதியுமான பகுதிக்குள் கால் சிக்கிக்கொண்டதால், நீரில் மூழ்கி உயிரிழந்தாா். தகவலறிந்ததும் பெருமாள்புரம் போலீஸாா், அவரது சடலத்தை மீட்டு வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.