மேலப்பாளையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிறுவா் பூங்கா பயன்பாட்டுக்கு திறந்துவைக்கப்பட்டது.
பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி, மேலப்பாளையம் மோத்தை மீரா பிள்ளைத் தெருவில், அப்பகுதி பள்ளிவாசல் ஜமாஅத்தாா்கள் சாா்பில் சிறுவா் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பூங்காவை, டி.பி.எம்.மைதீன்கான் எம்.எல்.ஏ. திறந்து வைத்தாா். ஜமாஅத் நிா்வாகிகள் முகைதீன் அப்துல் காதா், களந்தா் மீரான் மைதீன், காஜா நிஜாமுதீன், திமுக பகுதிச் செயலா் அப்துல் கையூம், மாவட்ட மாணவரணி நிா்வாகி மீரான் உள்பட பலா் கலந்துகொண்டனா்.