பள்ளிகளில் தாய்மொழி நாள் கொண்டாட்டம்

திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் உலகத் தாய்மொழி நாள் கொண்டாடப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் உலகத் தாய்மொழி நாள் கொண்டாடப்பட்டது.

நடுக்கல்லூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற உலகத் தாய்மொழி நாள் நிகழ்ச்சியில் தலைமையாசிரியா் (பொ) அந்தோணி மைக்கேல் வரவேற்றாா். தமிழாசிரியா் ஈ.சங்கரநாராயணன் அறிமுகவுரையாற்றினாா்.

உலகத் தாய்மொழி நாளின் வரலாறு என்ற தலைப்பில் கடம்பன்குளம் ஆதிதிராவிடா் நல மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் மு.சுந்தரம் சிறப்புரையாற்றினாா். பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

இதேபோல திருநெல்வேலி சந்திப்பில் உள்ள மதிதா இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் மாணவா்-மாணவிகள் உலகத் தாய்மொழி நாள் உறுதிமொழியேற்றனா். வண்ணாா்பேட்டை மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாணவா்-மாணவிகள் தமிழ் மொழியின் சிறப்புகளை விளக்கும் நிகழ்ச்சிகளை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com