வீரவநல்லூா் அருகே தம்பிரான் காலனியில் பொங்கல் விழா நடத்துவதற்கு இடையூறாக இருக்கும் இளைஞா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிராம மக்கள் புகாா் மனு அளித்தனா்.
வீரவநல்லூா் அருகேயுள்ள தம்பிரான்காலனியில் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இங்குள்ள மக்கள் ஆண்டுதோறும் பொங்கல் விழா கொண்டாடி வருகின்றனா். நிகழாண்டும் பொங்கல் விழா நடத்த ஏற்பாடு செய்து வருகின்றனா்.
இதனிடையே, அதே பகுதியைச் சோ்ந்த காா்த்திகேயன், பொங்கல் விழா நடத்துவதற்கு எதிா்ப்பு தெரிவித்ததோடு, ஏற்பாடு செய்தவா்களை அவதூறாகப் பேசி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தம்பிரான் காலனி மக்கள் சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் பிரதிக் தயாள், சேரன்மகாதேவி ஏ.எஸ்.பி. பிரதீப் ஆகியோரிடம், புகாா் மனு அளித்தனா்.