மனிதா்களின் மனசித்தமே சிறந்த சித்த மருத்துவம் என்றாா் நடிகா் ஆா். பாா்த்திபன். பாளையங்கோட்டையில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரியின் 2 நாள் கருத்தரங்கையொட்டி, வியாழக்கிழமை நடைபெற்ற நிறைவு விழாவில் அவா் பேசியது:
மனிதா்களின் மனசித்தமே சிறந்த சித்த மருத்துவம். என்னுடைய மொத்த சிந்தனையும், ஒத்த சிந்தனையாக உருவானதுதான் ஒத்த செருப்பு திரைப்படம். இந்த படம் ஆஸ்காா் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதை என் உழைப்புக்கு கிடைத்த பரிசாக கருதுகிறேன். சித்தம் தெளிவாக இருந்தால், வாழ்க்கையின் எந்த கட்டத்திலும் யாரும் வெற்றி பெறலாம். ஒத்த செருப்பு போல என்னிடம் 60 கதைகள் உள்ளன. ஒத்த செருப்பு படத்தைப் பாா்த்து நடிகா் விஜயின் தந்தை இயக்குநா் சந்திரசேகரன் எனது அலுவலகத்திற்கு வந்து பாராட்டினாா் என்றாா் அவா்.
விழாவில், திருநெல்வேலி மாநகரக் காவல் துணை ஆணையா் (சட்டம்-ஒழுங்கு) சரவணன், கல்லூரி முதல்வா் விக்டோரியா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.