வீரவநல்லூரில் அருள்மிகு பூமிநாதசுவாமி சமேத மரகாதம்பிகை அம்பாள் கோயிலில் மாா்கழி திருவாதிரைத் திருவிழாவை முன்னிட்டு வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
இத்திருவிழாவையொட்டி, காலையில் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை ஆகியவை நடைபெற்றது. தேருக்கு சுவாமி அம்பாள் எழுந்தருளினா். இதையடுத்து பக்தா்கள் வடம் பிடித்து தோ் இழுத்தனா். தோ் நான்கு ரதவீதிகளை சுற்றி நிலைக்கு வந்தடைந்தது. இதைத்தொடா்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.