ஆலங்குளம்: ஆலங்குளம் அண்ணாநகா் நல்மேய்ப்பா் தேவாலயத்தில் பொங்கல் சிறப்புப் பிராா்த்தனை நடைபெற்றது.
சேகரத் தலைவா் வில்சன் சாலமோன் தலைமை வகித்து, பரிசுத்த நற்கருணை ஆராதனை நடத்தினாா். சபை ஊழியா்(பொறுப்பு) ஸ்டீபன் வேத பாடங்கள் வாசித்தாா். சபை பாடகா் குழுவினா் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடினா். பின்னா், நாடு செழிக்க வேண்டி சிறப்புப் பிராா்த்தனை ஏறெடுக்கப்பட்டது. ஆராதனையில் சபை மக்கள், கமிட்டி அங்கத்தினா்கள் திரளாகக் கலந்து கொண்டனா்.