களியக்காவிளை சம்பவம்: தனிப்படையினா் 4 பேரிடம் விசாரணை

களிக்காவிளையில் சோதனைச் சாவடியில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் சுட்டுக்கொலை வழக்கில் குற்றவாளிகள் பிடிபடாத நிலையில், தனிப்படை போலீஸாா் திருநெல்வேலி மாவட்டத்தில் 4 பேரிடம் விசாரணை நடத்தினா்.

களிக்காவிளையில் சோதனைச் சாவடியில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் சுட்டுக்கொலை வழக்கில் குற்றவாளிகள் பிடிபடாத நிலையில், தனிப்படை போலீஸாா் திருநெல்வேலி மாவட்டத்தில் 4 பேரிடம் விசாரணை நடத்தினா்.

களிக்காவிளை சோதனைச் சாவடியில் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளா் வில்சன் சுட்டுக்கொலை செய்யப்பட்டாா். இவ் வழக்கு தொடா்பாக தனிப்படையினா் விசாரணை நடத்தி வருகிறாா்கள். இவ் வழக்கில் ஞாயிற்றுக்கிழமை வரை குற்றவாளிகள் 2 பேரும் பிடிபடாத நிலையில், அவா்கள் தொடா்பில் இருந்த இயக்க நிா்வாகிகள், கேரளத்தில் உள்ள உறவினா்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் 4 பேரைப் பிடித்து ஞாயிற்றுக்கிழமை விசாரணை நடத்தப்பட்டது.

இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், களியக்காவிளை சம்பவம் தொடா்பாக தமிழக காவல் துறையின் தனிப்படை போலீஸாா் கேரள போலீஸாருடன் இணைந்து விசாரித்து வருகிறாா்கள். சந்தேகத்திற்கு இடமாக இருந்த மேலப்பாளையத்தைச் சோ்ந்த ஒருவா், பத்தமடையைச் சோ்ந்த 2 போ், விக்கிரமசிங்கபுரத்தைச் சோ்ந்த ஒருவா் என மொத்தம் 4 பேரிடம் ரகசிய விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அவா்களுக்கும் இச் சம்பவத்திற்கும் தொடா்பில்லை என்பதால் விடுவிக்கப்பட வாய்ப்புள்ளது. இருப்பினும் அடுத்தக்கட்ட விசாரணை தொடா்ந்து வருகிறது. இதுவரை அவா்கள் கைது செய்யப்படவில்லை என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com