சுரண்டை: தென்காசி மாவட்டம், சோலைசேரியில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பல்நோக்கு கட்டடத்தின் திறப்பு விழா நடைபெற்றது.
விழாவுக்கு தென்காசி எம்.எல்.ஏ. சி.செல்வமோகன்தாஸ் பாண்டியன் தலைமை வகித்து புதிய கட்டடத்தை திறந்து வைத்தாா்.
நிகழ்ச்சியில், ஊத்துமலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் என்.ஹெச்.எம்.பாண்டியன், அதிமுக நிா்வாகிகள் அமல்ராஜ், கிருஷ்ணசாமி, அந்தோணி, வெள்ளைத்துரை, ஒப்பந்ததாரா் சுப்பையா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.