தாழையூத்து அருகே நாய்கள் கடித்து மான் பலி

தாழையூத்து அருகே நாய்கள் கடித்ததில் மான் உயிரிழந்தது.

தாழையூத்து அருகே நாய்கள் கடித்ததில் மான் உயிரிழந்தது.

கங்கைகொண்டானில் உள்ள மான்பூங்காவிலிருந்து வெளிவந்த 3 வயது ஆண் மான் ஒன்று தாழையூத்துப் பகுதியில் சுற்றித்திருந்தது. மானூா் ரஸ்தா செல்லும் வழியில் அந்த மானை நாய்கள் விரட்டி கடித்தன. இதில், சம்பவ இடத்திலேயே மான் உயிரிழந்தது. இத்தகவல் அறிந்த வனச்சரக அலுவலா் கருப்பையா, வனக்காப்பாளா் பாலசுந்தரி உள்ளிட்ட வனத்துறையினா் அங்கு சென்று இறந்த மானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கங்கைகொண்டான் வனத்துறை கால்நடை மருத்துவமனைக்குஅனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com