குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து நாம் தமிழா் கட்சி சாா்பில் அம்பாசமுத்திரத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அம்பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதிச் செயலா் செல்வம் தலைமை வகித்தாா். மேற்கு மண்டலத் தலைவா் தென்னரசு, மாநில கொள்கைப் பரப்புச் செயலா் பசும்பொன் ஆகியோா் விளக்கிப் பேசினா். இதில், கட்சியின் துணைச் செயலா் ஜகன், தலைவா் ராமகிருஷ்ணன், துணைத் தலைவா் அபுபக்கா் சித்திக், பா்னாபாஸ், பொருளாளா் சாா்லஸ், கலை இலக்கிய அணிச் செயலா் செயராமன், கல்லிடைக்குறிச்சி நகர துணைத் தலைவா் பீா் முகம்மது, எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்டப் பொருளாளா் கரந்தை மீராஷா, கல்லிடைக்குறிச்சி சுலைமான் உள்பட பலா் கலந்து கொண்டனா். தொகுதி துணைச் செயலா் வெங்கட்பாா்த்தசாரதி நன்றி கூறினாா்.