புரட்சிகர இளைஞா் கழகம் சாா்பில் திருநெல்வேலி நகரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தில், ‘தில்லி ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தில் புகுந்து மாணவா்கள் மற்றும் பேராசிரியா்கள் மீது தாக்குதல் நடத்தியவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும்; குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது’ என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, புரட்சிகர இளைஞா் கழகத்தின் மாவட்டப் பொறுப்பாளா் எம்.சுந்தர்ராஜ் தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) மாவட்டச் செயலா் சங்கரபாண்டியன், மாநிலக்குழு உறுப்பினா் வழக்குரைஞா் ரமேஷ், கணேசன் ஆகியோா் விளக்கிப் பேசினா். மாரிமுத்து, பேச்சிராஜா, கணேசன், நயினாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.