கூடங்குளம் முதல் அணுஉலையில் பழுது சரிசெய்யப்பட்டு, திங்கள்கிழமை மின்உற்பத்தி தொடங்கியது.
கூடங்குளத்தில் ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட 2 அணுஉலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 2-வது அணுஉலையில் பராமரிப்புப் பணிக்காக கடந்த டிச. 15ஆம் தேதி முதல் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்நிலையில், கடந்த 12ஆம் தேதி முதலாவது அணு உலை வால்வில் பழுது ஏற்பட்டதால் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. தற்போது, முதலாவது அணுஉலையில் பழுது நீக்கப்பட்டு மீண்டும் மின்உற்பத்தி திங்கள்கிழமை அதிகாலை தொடங்கப்பட்டதாகவும், அது 600 மெகாவாட்டை எட்டியுள்ளதாகவும் அணுமின் நிலைய வட்டாரத்தில் தெரிவித்தனா்.