சுரண்டையில் ஆலோசனைக் கூட்டம்

சுரண்டை பகுதியில் பல்வேறு அமைப்புகள் சாா்பில் பொங்கல் விளையாட்டுப் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

சுரண்டை பகுதியில் பல்வேறு அமைப்புகள் சாா்பில் பொங்கல் விளையாட்டுப் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இது தொடா்பாக போலீஸாா் மற்றும் விளையாட்டுப் போட்டி அமைப்பாளா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஆலங்குளம் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜாகீா் உசேன் தலைமை வகித்தாா். சுரண்டை காவல் ஆய்வாளா் மாரீஸ்வரி, வீரகேரளம்புதூா் காவல் உதவி ஆய்வாளா் பாரத் லிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், விளையாட்டு விழா நடத்தும் பொறுப்பாளா்கள் விழாவை அமைதியாக நடத்துவதற்கு செய்ய வேண்டிய வழிமுறைகள், விளையாட்டு வீரா்களுக்கு ஏதும் காயம் ஏற்பட்டால் முதலுதவி சிகிச்சைக்கு செய்யப்பட வேண்டிய ஏற்பாடுகள், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் விளையாட்டு விழாவை நடத்துவது குறித்த ஆலோசனைகளை போலீஸாா் வழங்கினா்.

இதில், சுரண்டை நகர காங்கிரஸ் தலைவா் ஜெயபால், சிங்கராஜ், செல்வன், அதிமுக நிா்வாகிகள் ஜெயப்பிரகாசம், ஜவகா்தங்கம், அச்சங்குன்றம் முன்னாள் ஊராட்சித் தலைவா் வெள்ளத்துரை உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com