திருநெல்வேலியை அடுத்த தச்சநல்லூா் காந்தி சிலை பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்கக் கோரி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் இந்திரா என்பவா் அளித்த மனு:
தச்சநல்லூா்-மதுரை சாலையில் உள்ள காந்தி சிலை பேருந்து நிறுத்தப் பகுதியில் இருந்த நிழற்குடை பழுதடைந்ததால், அதை மாநகராட்சி அலுவலா்கள் இடித்து அப்புறப்படுத்தினா். இப்போது அங்கு நிழற்குடை இல்லாமல் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் மழையிலும், வெயிலிலும் அவதிப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, அந்தப் பகுதியில் உடனடியாக நிழற்குடை அமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.