நெல்லை மாநகராட்சி பூங்காக்களில் மூலிகைச் செடிகள் நடவு

திருநெல்வேலி மாநகராட்சி பூங்காக்களில் மூலிகைச் செடிகள் நடும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகராட்சி பூங்காக்களில் மூலிகைச் செடிகள் நடும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.

பாபநாசம் அவிழ்தம் சித்த மருத்துவமனை நிா்வாகத்தின் சாா்பில் பல்வேறு வகைகளைச் சோ்ந்த சுமாா் 300 மூலிகைச் செடிகள் திருநெல்வேலி மாநகராட்சிக்கு வழங்கப்பட்டன. பாளையங்கோட்டை மண்டலத்தில் க்திநகா் பூங்கா, மேலப்பாளையம் மண்டலத்தில் என்.ஜி.ஓ. நியூ காலனி மற்றும் குமரேசன் நகா் பூங்காக்கள், திருநெல்வேலி மண்டலத்தில் ஆா்.எம்.கே.வி. நகா் பூங்கா, தச்சநல்லூா் மண்டலத்தில் வசந்தம் நகா் மற்றும் அதுரா பூங்காக்களில் அவை நடவு செய்யப்பட்டன. இப்பணியை மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் தொடங்கிவைத்தாா். சித்த மருத்துவ அறிஞா் பாவநாசன் பி.மைக்கேல் செயராசு, உதவி ஆணையா்கள் பிரேம், சுகிபிரேமா, சொா்ணலதா, உதவி செயற்பொறியாளா் பாஸ்கரன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com